திமுகவின் நூறு நாள் சாதனையை துண்டு பிரசுரங்களாக வெளியிட கோரிக்கை

திமுகவின் நூறு நாள் சாதனையை துண்டு பிரசுரங்களாக வெளியிட வேண்டும் என முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-13 05:15 GMT

தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன்

இதுகுறித்து தர்மபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பி.என்.பி.இன்பசேகரன் கூறியதாவது:

திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமை‌யிலான அரசு அமைத்து 14.8.2021 அன்றுடன் 100 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அரசு பேருந்துகளில் பயணிக்க பெண்களுக்கு கட்டணமில்லை, ஆவின் பால் விலைகுறைப்பு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா கால நிவாரணதொகை வழங்கியது. கொரோனா தடுப்புக்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்தது, மக்கள் பயன்பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் வசதி செய்தது.  

தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், பேரூராட்சிகளிலும், கிராமங்களிலும் கழகக் கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கியும், வீடுகள் தோறும் அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நலத் திட்டங்களை துண்டு பிரசுரங்களாக விநியோகிப்பதுடன், திண்ணை பிரச்சாரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், முன்னாள் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான பிஎன்பி இன்பசேகரன் தெரிவித்துள்ளார்.



Tags:    

Similar News