தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் தர்மபுரி மாவட்ட பா.ஜ.க.வினர் மரியாதை

தியாகி சுப்ரமணிய சிவா நினைவிடத்தில் தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2021-10-05 05:00 GMT

சுதந்திரப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா 138-வது பிறந்தநாள் விழா பாப்பாரப்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் சி.சரவணன், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் ஐஸ்வரியம் முருகன், மாவட்ட செயலாளர்கள் சங்கீதா, தினேஷ், மருத்துவ பிரிவு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஜெயசூர்யா, முன்னாள் நகர தலைவர் சக்திவேல், நகர பொது செயலாளர் வெங்கடேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News