மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம்: 3 பேர் போக்சோவில் கைது

மொரப்பூர் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செயய்யப்பட்டனர்

Update: 2021-08-11 04:45 GMT

தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி மாயமானதாக அவரது தந்தை புகார் செய்திருந்தார். இதன் பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வந்தார்.இந்நிலையில் சிறுமியை மீட்டு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது  சிறுமியை அவரது குடும்பத்தார் மொரப்பூர் ராசலாம் பட்டியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி வயது 29. என்பவருக்கு கட்டாயத் திருமணம் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் கழித்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி தான் காதலித்த 18 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து ராஜிவ் காந்தி, சிறுமியின் தந்தை, அவரது தம்பி ஆகியோரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமியை கடத்தி குடும்பம் நடத்திய 18 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News