அரூர் அருகே குளிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி பலி

அரூர் அருகே குளிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-11-07 17:00 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் தனபால்,வயது 85, கடந்த ஒரு மாதமாக, தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில் உள்ள மகள் ஜெயந்தி வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த, 4ந்தேதி, தீபாவளியன்று தென்பெண்ணையாற்றில் குளித்து விட்டு வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இன்றுகாலை, தரகம்பட்டி மயானம் அருகில் உள்ள தென்பெண்ணையாற்றில் தனபால் சடலம் மிதந்தது. அவரது மகன் பிரகாசம்,வயது 59, புகாரின்படி, கோட்டப்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி  விசாரித்து வருகின்றனர்ய.

Tags:    

Similar News