குண்டல்பட்டியில் குடும்பத்தகறாறில் கணவன் மாயம்: மனைவி போலீசில் புகார்

குண்டல்பட்டியில் குடும்பத்தகறாறில் கணவன் மாயமானதால் மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.

Update: 2021-12-07 04:45 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த குண்டல்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன்,வயது 30, இவரது மனைவி நிர்மலா, தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டை விட்டு வெளியேறிய பிரபாகரன் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இன்று கம்பைநல்லுார் போலீசில் மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News