அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் பலி

அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-09-02 17:15 GMT

கிணற்றில் தவிறி விழுந்தவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த உடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் வயது 29. இவர் இன்று காலை கல்யாணராமன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பகுதியில் நடந்து செல்லும் பொழுது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார் .

அவர் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆனந்தனை சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜான்சிராணி கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News