கருமத்தம்பட்டியில் 1.250 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Update: 2024-08-29 06:36 GMT

கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல் துறையினர் தண்ணீர் பந்தல் என்ற இடத்திற்கு அருகே சென்று சோதனை மேற்கண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (32) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News