உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ; இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை

Coimbatore News- கோவையில் உணவகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-10 01:45 GMT

Coimbatore News- பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த இடத்தில்  போலீசார் விசாரணை. 

Coimbatore News, Coimbatore News Today- கோவை சேரன் மாநகர் வினோபாஜி நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே பெட்டிக்கடை உள்ளது. நேற்று மாலை சில வாலிபர்கள் இந்த பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். சிகரெட்டுக்கான பணத்தை கேட்ட போது, கடைக்காரரிடம் அந்த இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்கிருந்து சென்ற நிலையில், இரவு 9.40 மணி அளவில் மீண்டும் அந்த பெட்டிக் கடைக்கு வந்து பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். ஆனால் தவறுதலாக பெட்ரோல் குண்டு அருகே இருந்த ஹோட்டல் அருகில் விழுந்து வெடித்துள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன்(வயது25) என்பவரை பிடித்தனர். குடிபோதையில் இருந்த அவர், சிகரெட் கேட்டு தகராறு செய்து விட்டு தனது நண்பர்களுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதனால் உணவகத்திலும் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், அது உடனடியாக அணைக்கப்பட்டது.

பெட்ரோல் குண்டு வீசிய வரதராஜனை பிடித்த காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசராணை நடத்தி வருகின்றனர். அவருடன் வந்த மற்ற இரண்டு வாலிபர்களையும் காவல் துறையினர் தேடி வருகிறார்கள். கோவையில்  இரவு நேரத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News