கோவை அருகே கோவில்பாளையத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

கோவை கோவில் பாளையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரிடம் காவல் துறையினர் சோதனை நடத்தி கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Update: 2024-10-03 13:45 GMT

கைது செய்யப்பட்ட பிரகாஷ்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில், கோவை மாவட்டக் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியான வையாபுரி நகர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் வையாபுரி நகர் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது . இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(56) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News