பராமரிப்பு பணிகளுக்காக பீளமேடு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பீளமேடு துணைமின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-12-13 05:20 GMT

பைல் படம்

கோவை பீளமேடு துணைமின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பர் 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்: பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலர் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர்,

வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி.எஸ்டேட், பி.எஸ்.ஜி.மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லேஅவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லைத் தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகர்,

அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர், பாலசுப்பிரமணிய நகர், பாலகுரு கார்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் குடியிருப்பு, ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை, திருவள்ளுவர் நகர்.

Tags:    

Similar News