மேட்டுப்பாளையம் அருகே மூதாட்டியிடம் வீடு புகுந்து நகை பறிப்பு
மேட்டுப்பாளையம் அருகே மூதாட்டியிடம் வீடு புகுந்து நகை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.;
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 44). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வெள்ளியங்கிரி தனது 68 வயது தாய் மாராத்தாள் என்பவரை தன்னுடன் வைத்து கவனித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். மாராத்தாள் தனியாக ஒரு அறையில் படுத்து இருந்தார்.
நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை அவருக்கு தெரியாமல் கழற்றி தப்பிச் சென்றனர். மறுநாள் செயின் மாயமானது கண்டு மாராத்தாள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்தார். அவர் வீட்டை ஆய்வு செய்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் கிடத்த 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.