கோவையில் கஞ்சா வியாபாரிக்கு கத்திகுத்து: இரு இளைஞர்கள் கைது

கோவையில் கஞ்சா வியாபாரியை கத்தியால் குத்திய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-05-11 13:11 GMT

கோவையில் கஞ்சா வியாபாரியை கத்தியால் குத்திய இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அப்சல் (19). கஞ்சா வியாபாரி. இவர் சுங்கம் பைபாஸ் ரோட்டில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உக்கடத்தை சேர்ந்த கார்த்திகேயன்(27) மற்றும் பாலமுருகன் (24) ஆகியோர் அப்சலிடம் வாக்குவாதம் செய்தனர் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் அப்சலை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரிய கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். கைதான 2 பேரும் மீதும் கஞ்சா விற்பனை , திருட்டு என பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. பின்னர் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்கனவே பல புகார்கள் எதிர்க்கட்சி தலைவர்களால் கூறப்பட்டு வருகிறது. போலீசாரும் தீவிர நடவடிக்கைஎடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கோவையில் கஞ்சா விற்பனை  தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கஞ்சா வியாபாரிக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News