இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தர்கள் வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருவிழா: திரளான  பக்தர்கள் வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் இருக்கன்குடி மாரியம்மன் 

ஏராளமான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து, மாவிளக்கு வைத்து, முளைப் பாரி சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

விருதுநகர் மாவட்டம் ,சாத்தூர் அருகேயுள்ள, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாதாந்திர வெள்ளி மற்றும் ஆடி பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இருக்கன்குடி ஆடி பெருந்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் இருக்கன்குடி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் நடைபெற்று வந்தன. ஆடி மாதாந்திர வெள்ளி மற்றும் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் 'ரிஷப' வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

மாரியம்மன் வீதி உலா நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து வந்தும், மாவிளக்கு எடுத்தும், முளைப்பாரி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஆடி மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வளர்மதி, பரம்பரை அறங்காவலர்கள் குழுத் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இலவச பொது மருத்துவ முகாம்
சாலை விபத்து மூன்று பக்தர்கள் உயிரிழப்பு
விருதுநகர் அருகே முன்னாள் அமைச்சர் தங்கப் பாண்டியன் நினைவு நாள்
காரியாபட்டியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்...!
காரியாபட்டி அருகே புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு
தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய  வைகாசி விசாக திருவிழா
ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த அமைச்சர்
காரியாபட்டி சக்தி மாரியம்மன் கோயில் விழாவில் முளைப்பாரி எடுத்த பெண்கள்
ராஜபாளையம் அருகே சங்கரபாண்டிய புரம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில்   குற்றம் சாட்டப்பட்ட இருவர் விடுதலை
விருதுநகர் தொகுதியில் ராதிகாவிற்கு வாக்கு சேகரித்த நடிகர் சரத்குமார்
பறக்கும்  படை நடவடிக்கை: வங்கியில் இருந்து கொண்டு வந்த பணம் பறிமுதல்
ai in future agriculture