/* */

கலவரம் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கலவரம் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

கலவரம் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை
X

தேர்தலில் கலவரத்தை துாண்டும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் ஏழு தொகுதிகளுக்கும் 21 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 7 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மாவட்ட எல்லைகளில் 9 நிலையான சோதனை சாவடிகள் மற்றும் தேர்தலுக்காக 5 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர்த்து தேர்தல் நெருங்குவதால், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 7 போலீஸ் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு குழுவினர் தேர்தல் தொடர்பான புகார்கள் மீது திடீர் சோதனையில் ஈடுபடுவார்கள். தேர்தல் வாகன சோதனை பணிகளில் 500 போலீசாரும், துணை ராணுவத்தினர் 560 பேரும் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் தேர்தல் அறிவித்த பிறகு சாராய வியாபாரிகள் 170 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 220 பேர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெற மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தேர்தலில் கலவரத்தை துாண்டும் வகையிலும், தேர்தலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Updated On: 30 March 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்