போர்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ள சிபிஎம் வலியுறுத்தல்

போர்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ள  சிபிஎம் வலியுறுத்தல்
X

வெள்ள சேதம் : மாதிரி படம் 

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிவாரண பணிகளை போர்கால அடிப்படையில் முடுக்கி விட சிபிஎம் கட்சி கோரிக்கை

வடகிழக்கு பருவமழையினால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி,ஆறு, குளங்களால் நிரம்பி ஊருக்குள் மற்றும் வயல்வெளிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உடனடி மீட்பு மற்றும் நிவாரணங்களை போர்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் என் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்,

அந்த மனுவில், தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி, மாவட்டத்தில் பல ஏரிகள் உடைந்து ஊருக்குள் மற்றும் வயல்களிலும் மழை வெள்ளநீர் புகுந்து மக்கள் மற்றும் விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்,

இந்தநிலை மாவட்டத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடந்து வருகிறது, மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகள், கால்வாய்களில் வெள்ளநீர் கரைபுரண்டு பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது, அதனால் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம், அனைத்து துறை அலுவலர்களை முடுக்கி போர்கால அடிப்படையில் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்து உள்ள நகர,கிராமபுற மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று தக்கவைக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவேண்டும்,

மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டு கூரை வீடுகள் இடிந்து, இழந்தவர்களுக்கு உரிய அரசு நிவாரணம் விரைவாக பெற்று தந்து, அவர்களுக்கு அரசு இலவச வீடு வழங்க வேண்டும், மாவட்டத்தில் தண்ணீரில் மூழ்கி பயிர் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகளை பாகுபாடு இன்றி வேளாண்மைதுறை மற்றும் வருவாய்துறை இணைந்து கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் வகையில் ஏரி, குளங்கள், குட்டைகள், ஆற்று வாய்க்கால்களை மேம்படுத்தி, ஆக்ரமிப்புகளை அகறறி சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Similar Posts
Adaippu Natchathiram in Tamil
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
விமானங்களின் டயர்கள் வெடிக்குமா? பஞ்சர் ஆகுமா..? அவசியம் தெரியணும்..!
ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தை இந்தியா ஏன் கிரிக்கெட்டில் பயன்படுத்துவதில்லை?
இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை  குறைக்க உதவும் பூண்டு சட்னி
கடற்கரை பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிய புதிய செயற்கைக்கோள் கருவி
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் காலில் தெரியும் அறிகுறி
சாராவும் 2 சாப்பாடும்..! நடந்த விளைவுகள் என்ன தெரியுமா..?
பண்டிகைகள் காரணமாக 3 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றம்
ai in future agriculture