திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 20ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20 ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவு தாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் இம்மாதம் 20ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை இரண்டு மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

இம்மு முகாமில் 15 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு ,பொறியியல், ஐடிஐ, பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் . முகாம் அன்று தங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதி சான்று, கல்வி தகுதி சான்றுகள் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் என்ற https://www.tnprivatejobs.tn.gov.in/ இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்கள் திமுகவில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Tags

Read MoreRead Less
Next Story