/* */

மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு புத்தாடை மளிகை பொருட்கள் வழங்கிய "லிட் தி லைட்"

மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை, இனிப்பு, மளிகை பொருட்களை "லிட் தி லைட்" வழங்கியது

HIGHLIGHTS

மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு புத்தாடை மளிகை பொருட்கள் வழங்கிய லிட் தி லைட்
X

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்ற லிட் தி லைட் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்ற லிட் தி லைட் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பொது முடக்கத்தால் வருவாய் இல்லாமல் தவித்து வரும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டம் தோறும் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்திலுள்ள 66 மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினருக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . கொரோனா முடக்கத்தால், வருவாய் இல்லாமல், பார்வையற்ற மாற்று திறனாளிகள் தவித்து வருகின்றார். இதனால் மாற்றுத் திறனாளிகள் குடும்பத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் புத்தாடைகள், இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்களை வழங்கினர்.

மேலும் தீபாவளி பண்டிகைக்காக அரிசி, பருப்பு உள்ளிட்ட 10 வகை மளிகைப் பொருட்களையும் தனியார் அறக்கட்டளையினர் வழங்கினார். இந்த பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு உதவியாக இருந்த தன்னார்வலர்களை பாராட்டி கேடயங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி பரத், தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் செண்பகவள்ளி, தர்மபுரி தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுகுமார், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகர், தனியார் பல்பொருள் அங்காடி உரிமையாளர் துரைராஜ் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Oct 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...
  3. நாமக்கல்
    மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல...
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து
  5. நாமக்கல்
    பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை
  6. நாமக்கல்
    வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு
  7. இந்தியா
    என்னது..கல்யாணத்துக்கு மாப்பிள்ளை இதெல்லாம் கேட்டாரா..?
  8. நாமக்கல்
    ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  9. உலகம்
    ஜப்பானில் பரவும் சதை உண்ணும் பாக்டீரியாக்கள்! இரண்டு நாட்களில்...
  10. திருவள்ளூர்
    குப்பை கழிவுகளால் ஏரி தண்ணீர் மாசுபடும் அபாயம்