தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா

X
By - Ananthan, Reporter |25 March 2021 12:23 PM IST
தருமபுரி மாவட்டத்தில் தொற்று பரவல் குறைவாகவே காணப்படுகிறது. மொத்த பாதிப்பு 54 ஆக உள்ளது. 8 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. தினமும் ஆயிரத்தை கடந்து கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.
அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் தொற்று பரவல் குறைவாகவே காணப்படுகிறது. மொத்த பாதிப்பு 54 ஆக உள்ளது. 8 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இதில் நேற்று 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும் தருமபுரியில் கொரோனா தொற்று பரவல் குறைவாகவே காணப்படுகிறது. அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி வருகிறது.
Next Story
Similar Posts
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu