திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ. 1.75 கோடியில் தெரு விளக்கு பணிகள்

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ. 1.75 கோடியில் தெரு விளக்கு பணிகள்
X

பைல் படம்

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலகுழு மாதாந்திர சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவொற்றியூர் பகுதியில் ரூ.1.75 கோடி செலவில் தெருவிளக்கு பணிகளை மேற்கொள்ள மண்டல குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலகுழு மாதாந்திர சிறப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பேசினர். அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் கே. கார்த்திக் பேசும்போது, எனது வார்டில் உயர் மின் அழுத்தம் பிரச்னையால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய மாமன்ற உறுப்பினர்கள் பலரும் தொடர்ந்து குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும். அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டடங்களை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, மண்டலம் முழுவதும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையான நிறைவேற்றப்பட்டு வருகின்றன. படிப்படியாக மாமன்ற உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றார்.

மண்டலத்தில் உள்ள 14 வார்டுகளில் ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் 1,110 பழுதடைந்த தெருவிளக்குகள், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு சுமார் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான 36 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டன.

Tags

Next Story
Similar Posts
சோழவரம் அருகே சோலிப்பாளையத்தில் புதிய மின்மாற்றியை திறந்த எம்எல்ஏ
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
மழை நீர் வீடுகளை  சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பூசாரியை காப்பாற்றிய பொதுமக்கள்
ஓடிடியில் வேட்டையன்! இவ்ளோ சீக்கிரமாவேவா?
செங்குன்றம் அருகே இராமானுஜர் உற்சவர் மூர்த்தி பிரதிஷ்டை விழா
அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் அஜித்குமார் திரைப்படங்கள்..! முதல்ல எது தெரியுமா?
சாம்சங் தொழிலாளர் போராட்டம்: பணிக்குத் திரும்ப வேண்டுகோள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
மகளிர் விடுதிகளுக்கு எச்சரிக்கை: நவம்பர் 15க்குள் இதை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை!
புழல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, மகன், தாய் கைது
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
கார்கில் வெற்றி நகரில் ரூ.27 லட்சத்தில் புதிய தெருவிளக்குகள்..! வெளிச்சம் வந்தாச்சு..!
சென்னை கோயம்பேடு கழிவு நீர் தொட்டியில்  குதித்து சிறுவன் தற்கொலை
ai in future agriculture