திருநங்கைகளுக்கு இனிப்பான செய்தி கொடுத்த சென்னை கலெக்டர்!

திருநங்கைகளுக்கு இனிப்பான செய்தி கொடுத்த சென்னை கலெக்டர்!
X
வேலைவாய்ப்பில் பயன்பெற திருநங்கைகளுக்கு சென்னை கலெக்டர் சீதா லட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் துவங்க உள்ள பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு இல்லத்தில் பணிபுரிய திருநங்கையருக்கு மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் திருநங்கையருக்கு பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு இல்லம் சென்னையில் துவங்கப்பட உள்ளது. அரசு சாரா அமைப்பில் இயங்கயுள்ள இந்த இல்லத்தில் பணிபுரிய, கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட மேலாளர், கணக்காளுமை உதவியாளர், ஆற்றுப்படுத்துனர், பகுதி நேர மருத்துவர், சமையலர், சுத்தம் செய்பவர், காவல் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருநங்கையருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தகுதியுடையோர் உரிய ஆவணங்களுடன், கரிமா க்ரஹ், சி- 122/69, கார்த்திகேயன் சாலை, பெரியார் நகர், சென்னை - 82 என்ற முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.அதேபோல், garimagrehtra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் சீதாலட்சுமி தெரிவித்துஉள்ளார்.

Tags

Next Story
Similar Posts
சோழவரம் அருகே சோலிப்பாளையத்தில் புதிய மின்மாற்றியை திறந்த எம்எல்ஏ
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
மழை நீர் வீடுகளை  சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்
மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பூசாரியை காப்பாற்றிய பொதுமக்கள்
ஓடிடியில் வேட்டையன்! இவ்ளோ சீக்கிரமாவேவா?
செங்குன்றம் அருகே இராமானுஜர் உற்சவர் மூர்த்தி பிரதிஷ்டை விழா
அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் அஜித்குமார் திரைப்படங்கள்..! முதல்ல எது தெரியுமா?
சாம்சங் தொழிலாளர் போராட்டம்: பணிக்குத் திரும்ப வேண்டுகோள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
மகளிர் விடுதிகளுக்கு எச்சரிக்கை: நவம்பர் 15க்குள் இதை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை!
புழல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை, மகன், தாய் கைது
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
சென்னை கோயம்பேடு கழிவு நீர் தொட்டியில்  குதித்து சிறுவன் தற்கொலை
ரஜினியை இயக்கும் மணிரத்னம்! உண்மை என்ன?
ai in future agriculture