திருவில்லிபுத்தூரில் ராணுவ வீரர் வீட்டில் பணம், நகை திருட்டு

Money and jewelery stolen from soldier's house in Srivilliputhur

Update: 2022-06-23 08:30 GMT

திருவில்லிபுத்தூரில், ராணுவ அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (49). இவர் ராணுவத்தில் சுபேதார் மேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன் விடுமுறையில் ஆனந்தராஜ் திருவில்லிபுத்தூருக்கு வந்தார். நேற்று சிவகாசியில் வசித்துவரும் தனது தந்தையை பார்ப்பதற்காக ஆனந்தராஜ் குடும்பத்துடன் சிவகாசிக்கு வந்தார். தந்தையை பார்த்துவிட்டு வீட்டுக்குச் சென்றபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிப்பதை பார்த்து ஆனந்தராஜ் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் வைக்கப்பட்டிருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம், புதிய செல்போன், கேமிரா மற்றும் சில பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ராணுவ அதிகாரி ஆனந்தராஜ், திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்குபதிவு செய்த போலீசார், ராணுவ அதிகாரி வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News