திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கணினி வழங்கும் விழா

Update: 2022-01-07 16:35 GMT

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கணினி வழங்கும் விழா நடைபெற்றது

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி சார்பில் கல்வி பயிலும் கிராமப்புற பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக இலவச கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு சேது பொறியியல் கல்லூரியின் நிறுவனர் முகம்மது ஜலீல் தலைமை வகித்தார்.  கல்லூரி முதன்மை செயல் அலுவலர் சீனி முகைதீன்,இணை முதன்மை செயல் அலுவலர் சீனி முகம்மது அலியார் மரைக்காயர், நிர்வாக இயக்குநர் நிலோபர் பாத்திமா,கல்லூரி ஆராய்ச்சி இயக்குநர் நாசியா பாத்திமா ஆகியோர் மாணவர்களுக்கு இலவச கணினிகளை வழங்கினர்.

விழாவில் கல்லூரி முதல்வர் செந்தில்குமார், துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.பள்ளி தலைமை ஆசிரியை பாத்திமா பேகம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், சண்முகம், பீர் முகம்மது ஆகியோர் செய்திருந்தனர். இதில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News