ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது: வாகனம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல். ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பு.

Update: 2022-01-31 03:33 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல். ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் உள்ள பந்தப்பாறை ஓடையில் தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மங்காபுரம் மேல்பக்கம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராகவன் என்பவர் டிராக்டர் வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டு வந்துள்ளார். அவரைப் பிடித்து வருவாய்த்துறையினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் மங்காபுரத்தை சேர்ந்த வாகன உரிமையாளர் மாரியப்பன் என்பவருக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்த நிலையில் அவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். ஓட்டிவந்த ராகவனை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான வாகன உரிமையாளர் மாரியப்பனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News