பள்ளி மாணவிக்கு தொந்தரவு: போக்சோவில் ஆசிரியர் கைது

திருவில்லிபுத்தூர் அருகே, பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்;

Update: 2022-09-17 12:45 GMT

திருவில்லிபுத்தூர் அருகே, பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அயன்நத்தம்பட்டி பகுதியில், அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக ஸ்டீபன் அந்தோணிராஜ் (52) வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு, ஆசிரியர் ஸ்டீபன் அந்தோணிராஜ் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து சினிமா பாட்டு பாடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் ஆசிரியரின் செய்கை குறித்து கூறியுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் ஸ்டீபன் அந்தோணிராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News