சிவகாசி அருகே 1லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

சிவகாசி அருகே 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பத்துக்கிய நபர் கைது

Update: 2021-05-25 13:38 GMT

சிவகாசி அருகே 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 634 மது பாட்டில்கள் பறிமுதல்-ஒருவர் கைது செய்யப்பட்டார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்டமடக்கிப்பட்டி கிராமத்தில் 1 லட்சம் மதிப்பிலான 634 மதுபாட்டில்கள் வெம்பக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது ஏற்கனவே கடந்த 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில் நேற்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெம்பக்கோட்டை ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கொட்டமடக்கிப்பட்டி கிராமத்தில் மாட்டுத்தொழுவத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்பியான 634 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அதனை பதுக்கி வைத்திருந்த பெரியசாமி (வயது 38) என்பவரை கைது செய்து வெம்ப கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News