சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்வு

Update: 2021-04-24 05:27 GMT

சிவகாசி அருகே சதானந்தபுரத்தில் உள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 15ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 16ம் தேதி ஆதிலட்சுமி என்ற பெண் தொழிலாளி பலியானார். படுகாயத்துடன் மேல்சிகிச்சைக்காக செந்தி, முத்துமாரி சுந்தரபாண்டி ஆகியோர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் சுந்தரபாண்டி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது .மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட 8 பட்டாசு ஆலை வெடி விபத்துக்களில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News