கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 14 பேர் மீட்பு

சிவகாசியில் கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 14 பேர் மீட்கப்பட்டனர்.

Update: 2021-07-22 14:45 GMT

சிவகாசியில் கொத்தடிமைகளாகவும் குழந்தைத் தொழிலாளர்களாகவும் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட 14 பேர் மீட்க சிவகாசி சார் ஆட்சியர் பிரிதிவிராஜ் அதிரடி நடவடிக்கை.

சிவகாசி அருகே தெய்வானை நகர் மற்றும் விஸ்வநத்தம் பகுதிகளில் அச்சகம் மற்றும் பாலித்தீன் பை தயாரிப்பு தொழில் நிறுவனங்களில் கொத்தடிமைகளாக மற்றும் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்த பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த 14 முதல் 20 வயது வரை கொண்ட 3 பெண்கள் உள்பட 14 பேர் மீட்கப்பட்டனர். 

Tags:    

Similar News