மக்கள் பணியாற்றிவிட்ட என் தந்தை ஓய்வெடுக்கட்டும்: விஜயபிரபாகரன் பேச்சு

எனது தந்தை விஜயகாந்த் எவ்வளவோ மக்கள் பணி செய்து விட்டார் அவர் ஓய்வெடுக்கட்டும். விஜயபிரபாகரன் பேச்சு.

Update: 2021-10-11 10:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக கட்சி விழாவில் கலந்து காெண்ட விஜயபிரபாகரன்.

எனது தந்தை விஜயகாந்த் எவ்வளவோ மக்கள் பணி செய்து விட்டார் அவர் ஓய்வெடுக்கட்டும். அவர் பணியை செய்வதற்காக நான் வந்துள்ளேன். எனது தோலில் சுமந்து இந்த கட்சியை கொண்டு செல்வேன் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேச்சு.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுரைக்காய்பட்டி பகுதியில் தேமுதிக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தொண்டர்களிடம் பேசுகையில்,

எனது ஆசை தேவைகளை உதறிவிட்டு எனது தந்தை விஜயகாந்தை நம்பியுள்ள தொண்டர்களுக்காக மட்டுமே நான் களத்தில் நிற்கிறேன். கேப்டனை என்னதான் தூக்கி எறிந்தாலும் சுவற்றில் எறிந்த பந்து போல் மீண்டும் மக்கள் முன்னால் வந்து நிற்பார். தேமுதிக கட்சி யாருக்கும் அடிமை இல்லை யாருக்கும் அடி பணிந்து போகாது.

அதிமுக 60 சீட்டில் தோற்றதற்கு காரணம் தேமுதிக கூட்டணியில் இல்லாததே. சிங்கம் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். எனது தந்தை எவ்வளவோ மக்கள் பணி செய்து விட்டார் அவர் ஓய்வெடுக்கட்டும். அவர் பணியை செய்வதற்காக நான் வந்துள்ளேன். எனது தோலில் சுமந்து இந்த கட்சியை கொண்டு செல்வேன்.

Tags:    

Similar News