வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு -போலீசார் விசாரணை

Update: 2021-04-20 11:00 GMT

சிவகாசி அருகே உள்ள பிள்ளைகுழி பகுதியில் முதியவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியில் உள்ள உணகவம் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள பிள்ளைக்குழி என்கிற பகுதியில் வெட்டுக்காயங்களுடன் அவர் சடலமாக கிடந்துள்ளார். வழியில் சென்றவர்கள் உடலை பார்த்து விட்டு இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் விரைந்து வந்த பாேலீசார் கழுத்தில் வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த சேகர் என்பவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த கொலைக்கான காரணம் குறித்தும் முதியவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு இவர் முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்கிற கோணத்தில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News