சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். 2பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Update: 2021-04-05 03:55 GMT

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் பலி-இருவர் படுகாயம்.


சிவகாசி அருகே எம்.துரைசாமியாபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழப்பு. மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர். விபத்தில் 3 பட்டாசு தயாரிக்கும் அறைகள் தரை மட்டமானது.

சம்பவம் அறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாரனேரி காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் நடைபெறும் 7 வது பட்டாசு ஆலை வெடி விபத்து இதுவாகும். 7 விபத்துக்களில் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News