ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி

ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.

Update: 2021-08-15 11:00 GMT

ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

வெம்பக்கோட்டை தாலுகாவை சேர்ந்த முத்தாண்டியாபுரம், கீழ செல்லையாபுரம், சங்கரபாண்டியபுரம், வல்லம்பட்டி, இ.எல். ரெட்டியாபட்டி ஊத்துப்பட்டி, பனையடிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு ஏழாயிரம் பண்ணைக்கு தான் வருகின்றனர்.

இவ்வாறு போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆதலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Similar News