ராசாப்பட்டி காளியம்மன் அம்மன்கோவிலில் ஆடி மாத பொங்கல் சிறப்பு வழிபாடு
ஆலங்குளம் அருகே உள்ள ராசாப்பட்டி காளியம்மன் கோவிலில் ஆடி மாத பொங்கல் விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ராசாப்பட்டி காளியம்மன் அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ராசாப்பட்டி காளியம்மன் கோவிலில், ஆடி மாத பொங்கல் விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பழம், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யபட்டு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி பெண்கள் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனர். இதில் பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.