சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

6 பேர் பலி 16 பேர் படுகாயம்

Update: 2021-02-25 11:45 GMT

சிவகாசியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து 6 பேர் பலி 16 பேர் படுகாயம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார் குறிச்சியில் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான தங்கராஜ் பாண்டியன் பட்டாசு ஆலை உள்ளது இந்த பட்டாசு ஆலை நாக்பூரில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டு மையத்தின் உரிமத்தில் செயல் படுகிறது. இன்று மாலை பேன்ஸி ரக பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது. இந்த வெடிவிபத்தில் 6 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 16 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் 80℅ தீ காயத்துடன் இரண்டுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீயை கட்டுப்படுத்த 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து புதுப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags:    

Similar News