கீழே கிடந்த செல்போனை ஒப்படைத்த சிறுமிக்கு போலீஸ் பாராட்டு

ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் நேர்மையை கண்டு காரியாபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் அசோக்குமார் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Update: 2022-06-25 08:00 GMT

காவல்துறையிடம் பரிசு பெற்ற மாணவி கௌசல்யா.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையம் அருகே உள்ள ஜெகஜீவன்ராம் தெரு பகுதியில் ரோட்டில் செல்போன் ஒன்று கீழே கிடந்து உள்ளது. அவ்வழியாகச் சென்ற ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் கௌசல்யா என்ற பள்ளி மாணவி அந்த செல்போனை எடுத்து உடனடியாக, காரியாபட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியின் நேர்மையை கண்டு காரியாபட்டி காவல்துறை சார்பு ஆய்வாளர் அசோக்குமார் தலைமையிலான போலீசார், ஆறாம் வகுப்பு மாணவி கௌசல்யாவிற்கு பொன்னாடை போர்த்தி பண வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.

கீழே கிடந்த செல்போனை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்து பரிசு பெற்ற ஜெகஜீவன்ராம் தெருவை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் கௌசல்யா என்ற மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். காவல் துறையிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்ட செல்போன் உரியவரிடம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் செல்போனை ஒப்படைத்தார்.

Tags:    

Similar News