காரியாபட்டியில் அரசின் காலை உணவுத் திட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு
காரியாபட்டியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் - தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தனர்;
காரியாபட்டியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் - தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தனர்
காரியாபட்டியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் - தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தனர்:
விருதுநகர் மாவட்டத்தில், தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்ட தொடக்க விழா காரியாபட்டி மந்திரி ஓடை அரசு பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் முத்துமாரி முன்னிலை வகித்தார். தமிழக வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மதிய உணவு திட்டத்தை தொடங்கிவைத்து, மாணவர்களுடன் காலை உணவை சாப்பிட்டனர்.
நிகழ்ச்சியில், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், தாசில்தார் விஜயலட்சுமி, மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி, யூனியன் ஆணையாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், பேரூராட்சித்தலைவர் செந்தில், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.