விருதுநகரில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி. பிறந்தநாள் விழா புகைப்பட கண்காட்சி
வ.உ.சிதம்பரம்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து குறிப்புகள் எடுத்துக் கொண்டனர்;
விருதுநகரில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150வது பிறந்தநாள் விழா புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட மாணவிகள்
விருதுநகரில் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150வது பிறந்தநாள் விழா புகைப்பட கண்காட்சி..
விருதுநகர் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் பெருமைகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அதில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு புகைப்பட கண்காட்சி பேருந்து சென்று, வ.உ.சி.யின் பெருமைகள் எடுத்துக்கூறப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார். விருதுநகரில் உள்ள அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு புகைப்பட கண்காட்சி பேருந்து கொண்டு செல்லப் பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து குறிப்புகள் எடுத்துக் கொண்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி.யின் 150 பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்த புகைப்பட கண்காட்சி பேருந்து மாவட்டம் முழுவதும் சுற்றிவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினர்.