ராஜபாளையத்தில் அரிசிக் கடையில் ரூ. 40 ஆயிரம் பணம் திருட்டு

ராஜபாளையத்தில், அரிசிக்கடையின் கூரையை பிரித்து 40 ஆயிரம் பணம் திருடிய மர்ம நபர்கள்

Update: 2022-09-07 11:30 GMT

பைல்ல படம்

ராஜபாளையத்தில், அரிசிக்கடையின் கூரையை பிரித்து நுழைந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போன சம்பவம் குறித்து

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன் (48). இவர் ராஜபாளையம் மடத்துப்பட்டி தெருவில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். இன்று காலை அரிசிக்கடைக்குச் சென்ற தங்கப்பாண்டியன், கடையின் மேற்கூரை பிரிந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கடையின் பணப்பெட்டியில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா ஆகியவை திருடு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அரிசிக்கடையின் மேற்கூரையை பிரித்து பணம் மற்றும் கண்காணிப்பு காமிராவை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார்  தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News