விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சிக் கூட்டம்..!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-02-13 10:41 GMT

ராஜபாளையம் ,நகராட்சி கூட்டம்.

விருதுநகர்.

ராஜபாளையம் நகராட்சியில் சாதாரண நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது 121 தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் சாதாரண நகர்மன்ற கூட்டம், நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், 32 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

நகர் மன்ற கூட்டத்தில், 1, 12, 15 , 31,32 , ஆகிய வார்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் சுகாதாரம், சாலை,தண்ணீர், வசதி இதுவரை செய்து தரவில்லை என கூட்டத்தில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு, நகர் மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகளில் சாலை வசதி சுகாதார வசதி மின்விளக்கு வசதி போன்ற வசதிகள் கூடிய விரைவில் செய்து தரப்படும் என, கூறினர் .

மேலும் ,கூட்டத்தில் 121 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் திட்டங்கள் உருவாக்கப்பட்டு அந்த வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்த தீர்மானங்களுக்கு அனைத்து உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். 

உறுப்பினர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்கேற்ப மக்களுக்கு பயன்தரும் விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tags:    

Similar News