விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நாளை (ஆக. 24) மின்தடை

ராஜபாளையத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.;

Update: 2022-08-23 15:30 GMT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில்  நாளை (ஆக. 24)  மின்தடை 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம்  மின் கோட்டத்தில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சேத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைச்சேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர் , நல்ல மங்கலம் ஆகிய இடங்களில்  24.8.2022( புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News