மின்சாரம் தாக்கி இறந்த மற்றும் காயமடைந்தவர் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஆறுதல்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆறுதல் கூறினர்;
தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சென்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர்
இந்நிலையில், தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சென்ற தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாத ரெட்டி ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், உயர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து,காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய அமைச்சர்கள் விபத்தில் மரணம் அடைந்த இருவரின் உடல்களுக்கும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினார்.