காரியாபட்டியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி

காரியாபட்டி வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிkளில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்

Update: 2022-09-23 17:00 GMT

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி, நரிக்குடி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி வட்டார பள்ளி அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி திருச்சுழி அருகே உடையாம்பட்டியில் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவர் தலைமை வகித்தார். ஸ்பீச் நிறுவன நிதி இயக்குனர் எர்ஸ்கின் முன்னிலை வகித்தார். போட்டியில்,வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஸ்பீச் மற்றும் சில்ட்ரன் பிலீவ் நிறுவனம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளித்தலைமை ஆசிரியர் சித்ரவேல்,ஸ்பீச் மக்கள் தொடர்பு அலுவலர் பிச்சை மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News