அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் வலம் வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள்

அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் வலம் வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள்.

Update: 2021-08-27 02:35 GMT

விருதுநகர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் அருப்புக்கோட்டை நகர் காவல் சார்பு ஆய்வாளர் களுக்கு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க அதிநவீன தோள்பட்டை கேமராவை வழங்கியுள்ளார். இந்த அதிநவீன தோள்பட்டை கேமராவுடன் அருப்புக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர்கள் கேமராவை மாட்டிக் கொண்டு வலம் வருகின்றனர். இந்த அதிநவீன கேமரா மூலம் திருடர்களை விரைவில் படம் எடுக்கவும் குற்றச் சம்பவங்களை உடனடியாக கண்டுபிடிக்கவும் ஏதுவாக இருப்பதாக அருப்புக்கோட்டை நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் கூறினார்.

Tags:    

Similar News