அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு- இன்று மின்தடை

அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-07-29 00:48 GMT
பைல் படம்

அருப்புக்கோட்டை பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று வியாழக்கிழமை (ஜூலை 29) மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் மனோகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் அருப்புக்கோட்டை துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இ்ன்று அருப்புக்கோட்டை நகா், பாலையம்பட்டி, ஆத்திப்பட்டி, பெரியபுளியம்பட்டி, தெற்குத்தெரு, மலையரசன் கோவில், சிட்டி பஜார், திருநகரம், விருதுநகா் செல்லும் சாலை, எஸ்.எம்.பஜார், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையப்பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News