அருப்புக்கோட்டை பகுதிகளில் இன்று பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கோவிலாங்குளம், காந்திநகர், கல்லூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை.

Update: 2021-10-07 08:30 GMT

அருப்புக்காேட்ைசுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வந்தது.

அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கோவிலாங்குளம், காந்திநகர், கல்லூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் நிலவியது. வெப்பம் சலனம் காரணமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, கோவிலாங்குளம், காந்திநகர், கல்லூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்து வந்தது.

அதிகாலை முதல் லேசான மழை பெய்தது தொடர்ந்து மழை அதிகமாக பெய்து வந்தது. இதனால் பள்ளி மாணவ மாணவிகள் அலுவலர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். அதிகாலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்ததால் குளிர்ந்த காற்றுடன் குளிர்ச்சியான பகுதியாக இருந்து வருகிறது.

கனமழை பெய்யும் என விவசாயிகளும் பொதுமக்களும் எதிர்பார்த்த நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது குளிர்ச்சியாக இருந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News