அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 சவரன் செயின் பறிப்பு

Update: 2021-04-13 09:30 GMT

அருப்புக்கோட்டையில் அடுத்தடுத்து 2 பெண்களிடம் 13 சவரன் செயின் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோயில் ரோடு நாகலிங்காநகரை சேர்ந்தவர் அய்யனார் மனைவி லதா, இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது மோட்டார்பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த 2 பேர், லதா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதேபோல் அருப்புக்கோட்டை டெலிபோன் ரோடு ஜோதிடர் சண்முகம் செட்டியார் தெருவை சேர்ந்த ரத்தினமணி என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார்பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த சுமார் 9 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். ஒரே நாளில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அருப்புக்கோட்டை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News