அருப்புக்கோட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த அருப்புக்கோட்டை தேர்தல் பறக்கும் படையினர்

Update: 2022-02-05 00:45 GMT

பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர் 

அருப்புக்கோட்டை காந்திநகர் அருகே அருப்புக்கோட்டை -கமுதி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்

அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, வாகனத்தில் சோப் ஆயில், பினாயில் மற்றும் பிளீச்சிங் பவுடர் ஆகிய பொருட்களை சில்லறை வணிக கடைகளுக்கு மொத்த வியாபாரம் செய்யும் வியாபாரி விஜயகுமார் என்பவர் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். 

உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர் வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து  பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தனர்.

Tags:    

Similar News