திண்டிவனத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆட்சியர் மோகன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-08-24 12:44 GMT

திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கலெக்டர் மோகன் இன்று வருகை தந்தார். அப்போது  விவசாயிகளின் விளைபொருட்களுக்கான தொகை நியாயமான முறையில் உரிய காலத்தில் வழங்கப்படுகிறதா என்பதையும் வியாபாரிகளின் தலையீடு ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் இன்று நேரில் சென்று மாவட்ட  ஆட்சியர் மோகன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது அங்கு உள்ள வசதிகள் குறித்து விவசாயிகளிடம் ஆட்சியர் நேரில் விசாரணை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News