திண்டிவனத்தில் சிறையில் இருக்கும் திமுக வேட்பாளர் வெற்றி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தேர்தலில் ஏற்பட்ட தகராறில் சிறைக்கு சென்றுள்ள திமுக வேட்பாளர் பாபு வெற்றி பெற்று உள்ளார்.

Update: 2022-02-23 00:30 GMT

பாபு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி 13-வது வார்டில் திமுக சார்பில் பாபு (39) போட்டியிட்டார். கடந்த 19-ம் தேதி வாக்குப் பதிவின்போது, இவரது தரப்புக்கும் அதிமுக வேட்பாளர் சுதா தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாகவும் மாறியது. இதுகுறித்த புகாரில் ரோஷனை காவல் துறையினர் இரு தரப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து திமுக வேட்பாளர் பாபு உள்பட 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைையில் திண்டிவனம் நகராட்சியில் 13-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுதாவை விட,  கூடுதல் வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் பாபு வெற்றி பெற்றார். தேர்தல் தகராறில் சிறைக்கு சென்றதால், வெற்றியை அவரால் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News