திருச்சியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தற்கொலை

திருச்சியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-09-15 09:00 GMT
தில்லைநகர் போலீஸ் நிலையம்

திருச்சி, வயலூர் ரோடு அம்மையப்பன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் ஜெயராஜ் (வயது40). இவர் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் மாருதி என்ற பெயரில் கிரைண்டர் உற்பத்தி செய்யும் கம்பெனியை நடத்தி வந்தார்.

இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்தவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜெயராஜின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News