திருச்சி உறையூர் சந்தையில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
திருச்சி மாவட்டம் உறையூர் வாரச்சந்தையில் கொரோனா விதி முறைகளின் படி காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளதா என கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.;
திருச்சிராப்பள்ளிமாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டம் உறையூர் வாரச்சந்தையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக விதிமுறைகளின்படி காய்கறி சந்தையில் அமைக்கப்பட்டுள்ளதா என கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உடனிருந்தனர்